Saturday, December 29, 2007

ஆழ்கடலில் உள்ள எமது மூதாதையர் !...

பூமியில் முதன் முதலாகத் தோன்றிய உயிரினங்கள்ஒரேயொரு கலம் (Unicellular) கொண்ட மிகச்சிறியஉயிரினம்! இவை கடலில்தான் முதலில் தோன்றின.காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. முதலில் தோன்றிய ஐீவராசிகளின் படிப்படியான மாற்றங்களில், முதற்படிமாற்றம் மீன்களாக தான் இருக்கவேண்டும்என்று விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.


35 கோடி கடலில் வாழ்ந்த மீன்கள் படிப்படியாக தரைக்குமுன்னேறி ஈருடகவாழியாகி பின் ஊர்வன ஐீவராசிகளாகி அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பின் இறுதியில்மனிதன் தோன்றியிருக்க வேண்டும்மென்றும் விஞ்ஞானிகள்நம்புகின்றனர்.


அதுசம்பந்தமான ஓர் ஒளிப்படம் ஒன்று! நானும் எங்கேயோ எப்போதோ சுட்டதை நீங்களும் பாருங்களேன்........

Monday, November 19, 2007

கன்னிப்பதிப்பு

அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கும் வணக்கம்,


"நிலாத்தூறல்" என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையத்துக்கு நான் புதியவன் இல்லை தான் ஆனால் வலைப்பதிவுகளில்இதுதான் என் கன்னிப்பதிப்பு. இந்த வலைதளத்தை எனது தாய்மொழியில் ஆரம்பித்ததைஎண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

நான் அவ்வப்போது அசைபோட்டு வந்த அந்த ஆதங்கங்களுக்கும் என் எண்ணத்தில் தோன்றும் எண்ணங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டுமென்று நினைத்ததோடு மட்டும் நின்றுவிடுவேன். ஆனால் அதற்கான காலம் இப்போது தான்கைகூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.

"பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம்" என்று தமிழனாய்ப் பிறந்து தரணியெங்கும்வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் இங்கே வலைப்பதிவுகளின் மூலம் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உறவுப்பாலத்தில்நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
என்னை இப்படி ஒரு முயற்சிக்கு தூண்டிய எனது நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவில்நன்றியை தெரிவித்துக் கொண்டு, தொடங்கிய இம் முயற்சி மேலும் சிறப்பாக அமையஎல்லாம் வல்ல நல்லூரான் திருவடியை பணிந்து எனது பதிவுகளை தொடங்குகிறேன்.
- நிஷா -

Custom Search